Load Image
Advertisement

ஸ்டார் ஓட்டல் வேண்டாம்; டீ கடை போதும்!

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியரில் நிறைய பேர், ஸ்டார் ஓட்டல் மற்றும் அங்குள்ள உணவுகளையும் விரும்புவதில்லை. கிராமங்களில் உள்ள சிறிய டீ கடை பெஞ்சுகளில் அமர்ந்து, உள்ளூர்வாசிகளை போல, உணவு அருந்தவே விரும்புவர்.
கேரள மாநிலம், கொல்லம் கல்லடர கிராமத்துக்கு வந்த இங்கிலாந்தை சேர்ந்தவர் காதரின். அங்குள்ள, சிறிய டீ கடை பெஞ்சில் அமர்ந்து, டீக்கு ஆர்டர் செய்தார். அப்போது, அங்கே ஒரு கிராமவாசி, 'பழம்பொரி' என்ற நேந்திர பழ பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

டீக்கடைக்காரரிடம், தனக்கும், அந்த பஜ்ஜியை கொண்டு வரச்சொல்லி, 'பழம்பொரி' சாப்பிட்டு, டீ குடித்தபோது, அவர் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; நட்சத்திர ஓட்டலில், இதுபோன்ற ருசியும், சந்தோஷமும் கிடைக்குமா?
ஜோல்னாபையன்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement