திருப்பூர் மாவட்டம், உடுமலை துங்காவியில் உள்ள அனுகிரஹா சர்வதேசப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி லட்சுமி பிரபா, தேர்ந்த சிலம்ப வீராங்கனை. சிலம்பம் போலவே அவரது வார்த்தை வீச்சிலும் கிழிபடுகிறது காற்று.
* ஒரு விஷயத்தை சந்திக்க மத்தவங்க யோசிச்சுட்டு இருக்கும் போது நான் அதை செஞ்சு முடிச்சிருப்பேன். சிலம்பம் எனக்கு கத்துக் கொடுத்த தைரியம் இது. இந்த தருணத்துல, நான் சிலம்பம் கத்துக்க காரணமா இருந்த என் அம்மாவுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்!
* தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்க. அப்பதான் தப்பு பண்ண நினைக்கிறவங்களுக்கு ஒரு பயம் வரும். செய்வீங்களா அங்கிள்?
எங்கள் லட்சுமி பிரபா
'படிப்புக்கும், சிலம்பத்துக்கும் நேர்த்தியா நேரம் ஒதுக்குற நேர மேலா ண்மை லட்சுமியோட பலம்!'
- சு.செல்வநாயகி, பள்ளி முதல்வர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!