ஆசிரியை கழுத்தறுத்து கொலை : கணவர் கைது
ராமநாதபுரம்: ஆசிரியை நள்ளிரவில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில்வீட்டருகே பிணமாக கிடந்தார். கொலை தொடர்பாக போலீசார் கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.ராமநாதபுரம் கோட்டைமேடு, கோழிக்கூட்டு தெருவை சேர்ந்தவர் சண்முகப்பிரியா,40. இவரது கணவர் மோகன்ராஜ். இவர்,காதர் பள்ளிவாசல் தெருவில் சலுான் நடத்தி வருகிறார். மகன் பொள்ளாச்சியில்இன்ஜினியரிங் படிக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் மட்டும் உடன் இருக்கிறார். சண்முகப்பிரியா, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை 5:45 மணிக்கு சண்முகப்பிரியா வீட்டில் இருந்து இரண்டு வீடுகளை அடுத்து, காலி இடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், நைட்டி அணிந்தபடி பிணமாக கிடந்தார். அவரது, தங்க நகை, தாலி செயின், வளையல், கொலுசு உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன.அருகில் நைலான் கயிறும் கிடந்தது. இதனால், குரல்வளையை கயிற்றால் இறுக்கியும், கத்தியால் அறுத்தும் கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.நகைகள் அப்படியே இருந்ததால் நகை, பணத்துக்காக கொலை நடக்கவில்லை, என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும், இரவில் இரண்டு வீடுகள் கடந்து, ஒரு வீட்டின் காலியிடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது, எப்படி என்பது குறித்தும் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.கழுத்தை இறுக்க வீட்டில் கட்டியிருந்த நைலான் கயிற்றை பயன்படுத்தி இருப்பதால், கணவர் மோகன்ராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!