டிராக்டரில் மணல் கடத்தல்: இருவர் கைது
மப்பேடு, மப்பேடு அருகே, டிராக்டரில் மணல் கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.மப்பேடு அடுத்த உளுந்தை பகுதியில், ஏரியில் டிராக்டரில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, மப்பேடு போலீசார், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்குள்ள ஏரியில், டிராக்டரில் மணல் கடத்தி வந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம், 23, மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவனை, போலீசார் கைது செய்தனர். டிராக்டரையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!