Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

தாகத்தை தணிக்கும் உணவு


வெயில் காலத்தில் அதிக தாகத்தை குறைக்கும் உணவு வகைகளுள் ஒன்றாக ஆயுர்வேதம், நெற்பொரியை கூறுகின்றது. பொரியில் 2 வகைகள் உண்டு. ஒன்று நெல்பொரி, மற்றொன்று அரிசிபொரி. அரிசிபொரி பிரபலமான அளவிற்கு நெல் பொரி பரவலாகவில்லை. மோட்டா ரக நெல்லை ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து, காயவைத்து, வறுத்து நெல் பொரி செய்யப்படுகின்றது. உமியை நீக்கி விட்டு நெல் பொரியை பிரித்து எடுக்கலாம், ஒருபடி அரிசி கிடைக்கக்கூடிய நெல்லில், சுமார் 8 படி பொரியை தயார் செய்யலாம். நெல் பொரியை காய்ச்சல் மற்றும் வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு கஞ்சியாக செய்து கொடுக்கலாம்.


தகவல் சுரங்கம்

மாசிக்கு ஏற்ற ராகம்


பரத முனிவர், எந்தெந்த மாதங்களுக்கு, என்னென்ன ராகம் எனும் பட்டியலை தந்துள்ளார். மாசியில் பாட வேண்டிய ராகம் 'தீபகம்'. மாசி, பங்குனியில் வெயில் துவங்கி, ஒளி பரவும் என்பதை குறியீடாக கொண்டு 'தீபக ராகம்', ஏற்ற ராகமாக கூறப்படுகிறது. இதற்கு ஒளி வீசக்கூடிய ராகம் என்பது அர்த்தம். இதன் பெயருக்கு ஏற்றாற் போல், இந்த தீபக ராகத்தை வீணை, மாண்டலின், சிதார் போன்ற இசை கருவிகளில் வாசிக்கும் போது, கேட்பவர் முகம் பிரகாசமாக மாறும். கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி என இரண்டுக்கும் ஏற்ற ராகமாக 'தீபகம்' உள்ளது. இந்த ராகத்தை பாட, தகுந்த நேரம் காலை வேளை. இது பெண் ராகம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement