Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
தாய்மொழியில் அறிவியல்
உலகில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் 60 சதவீதம் ஜப்பானில் தான் நடைபெறுகின்றன. இதற்கு காரணம், அவர்களின் தாய்மொழி வழிக்கல்வியே என கல்வியியலாளர்கள் கூறுகின்றனர். ஆங்கில அறியாமை குறித்து ஜப்பானில் தாழ்வு மனப்பான்மை இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும், ரஷ்ய அணு இயற்பியல் விஞ்ஞானிகள் வெளிநாட்டு பயணங்களில் சமாளிக்கும் வகையிலான ஆங்கில மொழி திறனை மட்டுமே பெற்றுள்ளனர். தாய்மொழியில் அறிவியல் கற்றவர்கள்தான், அறிவியல் துறைகளுக்கான நோபல் பரிசுகளை அதிகம் பெற்றுள்ளனர் .

தகவல் சுரங்கம்
முதல் தாய்மொழி பல்கலை
இந்தியாவில் பிரிட்டிஷார் முதன்முதலில் கோல்கட்டா பல்கலைக்கழகத்தை துவங்கினர். இந்தியரால், இந்தியர்களுக்காக துவங்கப்பட்ட முதல் தாய்மொழி பல்கலைக்கழகம் என்ற பெருமையை ஆமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீடம் பெற்றுள்ளது. ஒத்துழையாமை இயக்கத்தின் தொடர்விளைவாக, உயர்கல்வி வரை, தாய் மொழி வழிக்கல்வியை வலியுறுத்தி இப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து திலகர் வித்யாபீடம், காசி வித்யாபீடம் ஆகியன தாய்மொழி பல்கலைக்கழகங்களாக தொடங்கப்பட்டன. காந்தியடிகள் மறையும் வரை, இப்பல்கலைக்கழக வேந்தராக இருந்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement