அறிவியல் ஆயிரம்
முதுமை காதல்
இந்தியாவில் வயதான தம்பதியர்களுக்கு, தனி அறை தேவையில்லை என்ற கருத்து திணிப்பு உள்ளது. நமது நாட்டில் தனி அறை என்பது பாலியல் தொடர்பான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஆசியாவில் முதிய ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை தாம்பத்திய உறவு நீடிக்கிறது என்று கேட்டால், 70 வயது என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு. முதுமை, பாலியல் வாழ்க்கையில் நிச்சயமாக மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனைவி உடனான காதல் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தாது. தனிஅறை முதிய ஆண்களுக்கு, மனரீதியிலான மகிழ்ச்சியை தரும்.
தகவல் சுரங்கம்
மதங்களை கடந்த காதல்
பாரத ரத்னா விருது பெற்றவர் அருணா ஆசப் அலி. 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், மும்பையில் கோவாலியா டேங்க் மைதானத்தில் தடைகளை மீறி தேசிய கொடியை ஏற்றியவர். இவர் வங்காளத்தில் இந்து சமய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அருணா கங்குலி. கங்கோபாத்யாய் என்ற குடும்ப பெயரின் சுருக்கமே கங்குலி. காங்., தலைவர்களில் ஒருவரான ஆசப் அலியை காதலித்து திருமணம் செய்தார். மதங்களைக் கடந்த இக்காதலால் அருணா கங்குலி, அருணா ஆசப் அலி ஆனார். ஆசப் அலி அமெரிக்காவுக்கான முதல் இந்திய துாதர் மற்றும் ஒடிசா கவர்னராக இருந்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!