அறிவியல் ஆயிரம்
சிவராத்திரி கிழங்கு
மாசி சிவராத்திரி குல தெய்வ வழிபாடுகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக இது விளங்குகிறது. அதிகளவு நார்ச்சத்து கொண்டதாக அறியப்படும் ஓட்மில்லை விட, இக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம். முதுமை தோற்றத்தை மாற்றும் ஆற்றல் கொண்டது. இதனை வத்தாளை கிழங்கு, சீனிக் கிழங்கு என்றும் கூறுவர். இந்தியில் இதனை 'மீட்டா ஆலுா' என்பர். அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இக்கிழங்கை போர்த்துகீசியர்கள் தான் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினர். உலகில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு உற்பத்தியில் சீனா முன்னணியில் உள்ளது.
தகவல் சுரங்கம்
காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
அளவில் மிக சிறிய குறுநாவலாக வந்த தேவதாஸ்,வங்கமொழியில் 1917ல் வெளிவந்தது. தேவதாஸ் என்ற சொல் காதல் தோல்வி, சோகம், துயரம் போன்றவற்றின் குறியீடாக இன்றும் இருப்பதற்கு இந்நாவல் தான் காரணம். தேவதாசை இந்த நாவலில் பார்வதியும், சந்திரமுகியும் காதலிக்கின்றனர் நாவலின்படி, தேவதாஸ் இருவரையுமே காதலிக்கவில்லை. நாவலில் தேவதாசிற்கு வயது 19. பார்வதியின் வயது 13. சரத்சந்திரர் இந்த நாவலை எழுதிஉள்ளார். தேவதாஸ் நாவல் தமிழில் திரைப்படமாக வெளிவந்தது. நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்திருந்தனர். திருமணமாகாதவள் என்ற நாவலையும், இவர் எழுதியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!