Load Image
Advertisement

பக்க வாத்தியம்

'பெண்களிடம் வயசை கேட்கக் கூடாது!'



பிரான்ஸ் நாட்டில் இருந்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான இரண்டு பெண்கள் உட்பட, எட்டு பேர், சமீபத்தில் தமிழகம் வந்தனர். மதுரையில் இருந்து, ராமேஸ்வரம் செல்லும் வழியில், திருப்புவனத்தில், பொதுமக்கள் பலர், அவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பழங்கள், பிஸ்கட்கள் கொடுத்து உபசரித்தனர்.

இளைஞர்கள் சிலர், பிரான்ஸ் பெண்மணிகளிடம், அவர்கள் வயது என்ன எனக் கேட்க, 'ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்கக் கூடாது; பெண்களிடம் வயதைக் கேட்கக் கூடாது' என, நகைச்சுவையாகக் கூறினர்.

அங்கிருந்த சிலர், 'எந்த நாடாக இருந்தாலும் சரி, பெண்கள் பெண்கள் தான்... வயசை சொல்ல மாட்டேன்றாங்கப்பா...' என, 'கமென்ட்' அடிக்க, சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement