Load Image
Advertisement

பக்க வாத்தியம்

தினகரன் ஆதரவாளர் போல் பேசலாமா?
திருச்சியில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசனிடம், 'சசிகலாவின் பினாமிகளை கண்டறிவது சிரமமாக உள்ளது' என்று, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுவது குறித்து, நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு முத்தரசன், 'அ.தி.மு.க.,வின் வரவு - செலவு அனைத்தும் தெரிந்த பினாமிகள், ஓ.பி.எஸ்., மற்றும், இ.பி.எஸ்., தான். வைத்திலிங்கத்திற்கும் தெரியும். இவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தினால், எல்லாம் கிடைச்சுடும். அவர்களுக்கு தான், ஜெ., ஆட்சியில் என்ன வரவு, எப்படி வந்தது என்பது தெரியும். அவர்கள் தான் உண்மையான பினாமிகள்' என்று கூறினார்.

கட்சி நிர்வாகிகள் இருவர், 'முத்தரசன் ஏன் தினகரன் ஆதரவாளர் போல் பேசுகிறார்? சசிகலா குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்தது அனைவருக்கும் தெரியும். அது தெரிந்தும் இப்படி பேசுகிறாரே... மற்ற கட்சியினர், நம்மைப் பற்றி என்ன நினைப்பர்...' என, முணுமுணுத்தனர்.



வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement