Load Image
Advertisement

பக்க வாத்தியம்

இதுக்கு எதுக்கு குறைதீர் முகாம்?


மேற்கு மண்டல போலீசாருக்கான குறைதீர் முகாம், கோவையில் நடந்தது. டி.ஜி.பி., ராஜேந்திரன், மூன்று மாநகர், எட்டு மாவட்ட போலீசாரின் குறைகளை, மனுக்களாக பெற்றார்.டி.ஜி.பி., பேசும் போது, ''முதல்வர் உத்தரவின்படி, ஒவ்வொரு மண்டலத்திலும், இந்த முகாம் நடத்தப்படுகிறது. போலீசார், தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கலாம்,'' என்றார்.பின், ஏ.டி.எஸ்.பி., --- டி.எஸ்.பி., போன்ற அதிகாரிகளிடம் மட்டும் மனுக்களை பெற்றவர், எஸ்.ஐ., ஏட்டு போன்றவர்களின் மனுக்களை, அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.நொந்து போன பல போலீசார், 'பிரச்னைக்கு காரணமே, அவங்க தான்... அதை பத்தி குறை சொல்ல வந்தா, அவங்ககிட்டயே மனுவை கொடுக்க சொல்றாரே' என, முணுமுணுத்தபடியே, திரும்பி சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement