வெளியே பருவ மழை; உள்ளே கருத்து மழை!
மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், செல்லதுரை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.அடுத்து பேசிய அமைச்சர், உதயகுமார், 'வெளியில் வட கிழக்கு பருவ மழை பெய்கிறது. உள்ளே துணைவேந்தரின் கருத்து மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் கருத்து மழை தொடரும் என, நினைத்தோம். மாணவர்களை பார்த்ததும், துணைவேந்தர் உற்சாகமாகி விட்டார்' என்றார்.
'பொதுவாகவே, 'மைக்'கை கண்டால் துணைவேந்தர் ஒரு பிடி, பிடித்து விடுவார். மாணவர்களை பார்த்தால், 'மைக் துரை' ஆகி விடுவார்' என, பார்வையாளர்கள் கிண்டலடித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!