'லாவண்யா கொசு' உற்பத்தியாகும்!
டெங்கு
காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில், பெரம்பலுார், சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி
வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பெரம்பலுார், எம்.எல்.ஏ.,
தமிழ்ச்செல்வன் பேசுகையில், 'கேட்பாரற்று கிடக்கும் அம்மிக்
கல்லிலும், ஆட்டுக்கல்லிலும், மழை தண்ணீர் தேங்கி இருக்கும். அதை
உற்றுப் பார்த்தால், 'லாவண்யா கொசு' உற்பத்தியாகி இருக்கும்' என்றார்;
மாணவியர் சிரித்தனர். 'அது லாவண்யா கொசு இல்லே சார்... லார்வா...'
என்றனர்.
ஆசிரியர்கள் சிலர், 'லார்வான்னா கொசு, தன் முழு உருவத்தை
அடைவதற்கு முந்தைய உருவம்ன்னாலும் தெரிஞ்சு வச்சிருக்க வேண்டாமா...
லார்வாவை, 'லாவண்யா கொசு'ங்கிறாரே...' என, தலையில் அடித்துக்
கொண்டனர்.
அனைவர் கண் முன்னும், தெர்மாகோல் ராஜு ஒரு கணம் வந்து சென்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!