கடன் வழங்கும் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் திருட்டு
சென்னை, சென்னை, மாதவரம் அலெக்ஸ் நகர், 'ஏ' காலனியில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது.
அலுவலக பொறுப்பாளர் ஆரோக்கியதாஸ், 29, அலுவலகத்தின் முதல் தளத்தில் தங்கியிருந்தார். நேற்று காலை, 5:45 மணிக்கு எழுந்து பார்த்த போது, அலுவலகத்தின் பின்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, இரும்பு பெட்டகத்தில் வைத்திருந்த, நான்கு லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!