இப்படியும் ஒடுக்கலாமோ!
மதுரை மாநகராட்சி சிறுவர் பூங்காக்களை, அமைச்சர் ராஜு சமீபத்தில் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், 'தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் காலி இடங்கள் அடையாளம் காணப்பட்டு, பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் காலி இடங்களை ஆக்கிரமித்து, புகலிடமாக மாற்றி வரும் சமூக விரோதிகள் ஒடுக்கப்படுவர்' என்றார். 'பல ஏக்கர்கள்ல அடுக்குமாடி கட்டி, 'அலம்பல்' செய்யும் ஆக்கிரமிப்பாளர்கள் இவர் கண்ணுக்குத் தெரியவே மாட்டாங்க... 'தெர்மாகோல்' அமைச்சருக்கு மட்டும் தான், இப்படியெல்லாம் யோசிக்கத் தோணும் பா...' என, நிருபர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!