ADVERTISEMENT
மும்பை: மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங்கை, 'சஸ்பெண்ட்' செய்ததோடு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் பதவி இழந்தார். இதையடுத்து மஹாராஷ்டிரா ஊர்காவல் படை தலைவாக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தேசியவாத காங்.,கை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பரம்வீர் சிங் ஊழல் குற்றச்சாட்டு கூறினார். அதன் பின் ஆக., 29 வரை மருத்துவ விடுப்பில் சென்றார்.
விடுப்பு முடிந்தும் பணிக்கு திரும்பாத பரம்வீர் சிங் தலைமறைவானார். அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டிய நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து பரம்வீர் சிங் சமீபத்தில் மும்பை திரும்பினார்.
விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் தகவல் தெரிவிக்காமல் ஆறு மாதங்களாக பணிக்கு திரும்பாத பரம்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து மஹாராஷ்டிரா அரசு நேற்று உத்தரவிட்டது. மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (6)
இதுக்கெல்லாம் தமிழ்நாடு தாங்க பெஸ்ட். அரசுக்கு எதிராக பேச நினைத்தாலே குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ள வெச்சிடுவாங்க. இவரு அமைச்சர் மேலேயே புகார் சொல்லியிருக்காரு. சும்மா உடுவாங்களா? 15 லட்சத்திற்க்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிகினாரு.
உள்ளே தூக்கி வைப்பதை விட்டுவிட்டு தொங்க விடுவதெல்லாம் ஓவர்.
ஆகஸ்டு 29 லேருந்து இன்னி வரை சுமார் மூணு மாசம் தானே ஆகுது. ஆறு மாசம்னு சொல்றாங்க. இவிங்களோட நடவடிக்கைகளைப் பார்த்தால் சீக்கிரமே வழக்கை குழப்பி, நீதிபதிகளை குழப்பி, பரம்வீர் ஒர் அப்பாவின்னு நிரூபிச்சு, பிரமோஷனுடன் வேலை குடுத்திருவாங்க. தேஷ்பக்தியுடன் தலைமறைவானார்னு விருதும் குடுப்பாங்க.
அவரு நல்லவரா, கெட்டவரா? சொல்லுங்க நைனா.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சஸ்பெண்டே இப்பதானா? ஆக, 1 வருடம் தலைமறைவு வாழ்க்கையிலும் சம்பளம் வாங்கியிருக்காரு? என்ன ஜனநாயகம்ன்னு தெரியலை. பார்லிமெண்ட்லியும் மக்கள் வரிப்பணத்தில் கூத்தடிக்கிறாங்க, அதிகாரிகளும் கூத்தடிக்கிறாங்க, ஜனநாயகத்தில் என்ன நடக்கிறது தெரியவில்லை.