Load Image
Advertisement

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ 100 கோடி கறுப்பு பணம்

புதுடில்லி-மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள 'ரியல் எஸ்டேட்' நிறுவனத்தில் 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்
Latest Tamil News

.மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில் 100 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கியதுடன், 23.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய அறிக்கை:மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் வருமான வரி மோசடியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.அந்நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
Latest Tamil News
மேலும், 23.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.வங்கி லாக்கர்கள் பலவும் முடக்கப்பட்டன. பெரிய அளவில் நிலம் வாங்குவதற்காக கணக்கில் வராத வருமானத்தை முதலீடு செய்த முக்கிய நபர்களும் சிக்கிஉள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது


வாசகர் கருத்து (6)

  • raja - Cotonou,பெனின்

    எல்லாம் தாக்ரே... ரவுல்...நம்ப கே டி விவசாயி பவார் ஆளுங்களாத்தான் இருபானுவோ... கூட்டணி போட்டு கொள்ளை அடிக்கிறானுவோ.....

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    உடனே திருடர்களுக்கு ஆதரவாக போராட ஆரம்பித்து விடுவார்கள் ஏன் என்றால் ரியல் எஸ்ஸ்டே காரர்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் பினாமிகள் மகாராஷ்டிரா அரசின் செயல்பாடுகள் நாட்டுக்கு தீங்கு விவரிவிக்கும் வகையில் உள்ளது

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Udane

  • duruvasar - indraprastham,இந்தியா

    '15லட்சம்' என் லட்சியம் என ஒரு கொசு தினமும் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிறது. ஏதாவது செய்யுங்கள்.

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    ரியல் எஸ்டேட் தொழிலால் நாட்டில் கணக்கில் காட்டாத பணம் சொல்லி மாளாது. இப்படிப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மத்திய அரசு சலுகை வழங்குகிறது அந்த தொழில் நலிந்து போகிறது என.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement