ஊரடங்கு உத்தரவை மீறியதாகவிழுப்புரத்தில் 10,657 பேர் கைது
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 10 ஆயிரத்து 657 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 17ம் தேதி மட்டும் 112 வழக்குகள் பதிவு செய்து, 112 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 17ம் தேதி வரை 10 ஆயிரத்து 426 வழக்குகள் பதிவு செய்து, 10 ஆயிரத்து 657 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுவரை 7,453 இருசக்கர வாகனங்கள், 131 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 159 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!