அபாரமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அலங்கநல்லுார் ஜல்லிக்கட்டுதான்,காரணம் சாசங்களுக்கும் வீரத்திற்கும் கொஞ்சமும் குறைவிருக்காது என்பதுதான்.
இந்த வருடம் நடந்த ஜல்லிக்கட்டும் எதிர்பார்த்தபடியே அபாரமாக நடந்தது.காலை 8 மணிக்கு ஆரம்பித்த ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்குதான் நிறைவு பெற்றது.
மொத்தம் 739 காளைகள் களமிறங்கியுள்ளன. 688 வீரர்கள் களத்தில் இருந்துள்ளனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.
முதலிடம் பிடித்த காளை: மாறநாடு குளமங்கலம் காளைஇரண்டாம் இடம் பிடித்த காளை: போலீஸ் எஸ்.ஐ அணுராதாவின் காளை,மூன்றாமிடம் பிடித்த காளை: ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளை.
16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பெற்றார் இவருக்கு சென்னையில் வைத்து முதல்வர் கார் பரிசாக வழங்குவார், 14 காளைகளை அடக்கிய ஆழகர்கோவில் கார்த்திக் இரண்டாம் இடம், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
படங்கள்:கார்த்திகேயன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!