ADVERTISEMENT
புருசெல்ஸ் : பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகளாவிய அகதிகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, சார்லஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, கூட்டணி பெல்மிஸ்ட் தேசிய கட்சி வாபஸ் பெற்றது. இதனால், மைனாரிட்டி அரசாக, சார்லஸ் மைக்கேலின் அரசாங்கம் மாறியது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு பார்லி.,யில் சார்லஸ் மைக்கேலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.
இதனால் திணறிய மைக்கேல், மன்னர் பிலிப்பிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். வருகிற மே மாதம் பார்லி., தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் பதவி விலக உள்ளது அந்நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகளாவிய அகதிகள் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, சார்லஸ் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, கூட்டணி பெல்மிஸ்ட் தேசிய கட்சி வாபஸ் பெற்றது. இதனால், மைனாரிட்டி அரசாக, சார்லஸ் மைக்கேலின் அரசாங்கம் மாறியது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு பார்லி.,யில் சார்லஸ் மைக்கேலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.
இதனால் திணறிய மைக்கேல், மன்னர் பிலிப்பிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். வருகிற மே மாதம் பார்லி., தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் பதவி விலக உள்ளது அந்நாட்டு அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.