ADVERTISEMENT
அவிநாசி:உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான கடைகளை உள்வாடகைக்கு விடுவதை தடுக்கும் வகையில், உரிமதாரர்களின் பெயரில், உணவு பாதுகாப்பு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாநிலம் முழுக்க உள்ள உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த கடைகளை ஏலம் விடும் விவகாரம், பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
.கடைகளின் உரிமதாரர்களை காட்டிலும், அவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் பினாமி பெயரில் நடத்தப்படும் கடைகளை ஏலம் விட, உள்ளாட்சி நிர்வாகம் முனைப்புக்காட்டி வருகிறது. இதற்கு, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.உள்ளாட்சிக்கு சொந்தமான கடைகளை நடத்தும் வியாபாரிகளில், 80 சதவீதம் பேர், அரசியல் கட்சி சார்ந்தவர்களாக உள்ள நிலையில், கடை ஏல விவகாரத்தில் 'கை கோர்த்து' எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், 'உள்ளாட்சி கடைக்காரர்கள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும்' என, உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுவும், 'கடைகளின் உரிமதாரர் பெயரில் தான் உரிமம் பெற வேண்டும்' எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, 'கடைகளை நடத்தி வருபவர் பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்க வேண்டும்' என, வற்புறுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு இடையே, உள்ளாட்சி கடையை நடத்தும் உரிமதாரர் அல்லாத உள் வாடகைதாரர்கள், கடைகளின் உரிமத்தை, தங்கள் பெயரில் புதுப்பித்து கொள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களை அணுகுகின்றனர். ஆனால், கடை நடத்துவோர் பெயரில் உரிம புதுப்பிப்பு வழங்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில்,'உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழுள்ள கடைகளை உள்வாடகை அடிப்படையில் நடத்தும் பலர், தங்களது பெயரில் கடைகளின் உரிமத்தை மாற்ற ஆர்வம் காட்டுகின்றனர்.கடைகளின் உரிமதாரர்கள் தவிர, கடை நடத்தும் வேறு யாரும், அவர்களது பெயரில் கடைகளின் உரிமத்தை மாற்றம் செய்யக் கூடாது; உரிமதாரர்கள், கடைகளை நடத்த முடியாமல், திரும்ப ஒப்படைத்தால் மறு ஏலம் விட வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது,' என்றனர்.
.கடைகளின் உரிமதாரர்களை காட்டிலும், அவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் பினாமி பெயரில் நடத்தப்படும் கடைகளை ஏலம் விட, உள்ளாட்சி நிர்வாகம் முனைப்புக்காட்டி வருகிறது. இதற்கு, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.உள்ளாட்சிக்கு சொந்தமான கடைகளை நடத்தும் வியாபாரிகளில், 80 சதவீதம் பேர், அரசியல் கட்சி சார்ந்தவர்களாக உள்ள நிலையில், கடை ஏல விவகாரத்தில் 'கை கோர்த்து' எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், 'உள்ளாட்சி கடைக்காரர்கள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும்' என, உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுவும், 'கடைகளின் உரிமதாரர் பெயரில் தான் உரிமம் பெற வேண்டும்' எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, 'கடைகளை நடத்தி வருபவர் பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்க வேண்டும்' என, வற்புறுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு இடையே, உள்ளாட்சி கடையை நடத்தும் உரிமதாரர் அல்லாத உள் வாடகைதாரர்கள், கடைகளின் உரிமத்தை, தங்கள் பெயரில் புதுப்பித்து கொள்ள நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களை அணுகுகின்றனர். ஆனால், கடை நடத்துவோர் பெயரில் உரிம புதுப்பிப்பு வழங்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில்,'உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழுள்ள கடைகளை உள்வாடகை அடிப்படையில் நடத்தும் பலர், தங்களது பெயரில் கடைகளின் உரிமத்தை மாற்ற ஆர்வம் காட்டுகின்றனர்.கடைகளின் உரிமதாரர்கள் தவிர, கடை நடத்தும் வேறு யாரும், அவர்களது பெயரில் கடைகளின் உரிமத்தை மாற்றம் செய்யக் கூடாது; உரிமதாரர்கள், கடைகளை நடத்த முடியாமல், திரும்ப ஒப்படைத்தால் மறு ஏலம் விட வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது,' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!