Load Image
Advertisement

திக்விஜய் சிங்கிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பா?

 திக்விஜய் சிங்கிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பா?
ADVERTISEMENT
புதுடில்லி : காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதா என புனே போலீஸ் அதிகாரிகள் விரைவில் விசாரணையை துவக்க உள்ளனர்.


மாவோயிஸ்டுகளிடம் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றி உள்ளனர். அதில் தங்களின் நண்பர் என குறிப்பிட்டு தொலைப்பேசி எண் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணை சரிபார்த்த போது, அது காங்., தலைவரும் ம.பி., முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்கின் தொலைப்பேசி எண் என்பது தெரியவந்துள்ளது.


மாவோயிஸ்டுகள் திக்விஜய் சிங்கின் எண்ணை எதற்காக குறிப்பிட்டுள்ளனர், மாவோயிஸ்டுகளுக்கும் திக்விஜய் சிங்கிற்கும் என்ன தொடர்பு என்பது குறித்த விரிவான விசாரணையை புனே போலீசார் விரைவில் துவக்க உள்ளனர்.



மாவோ., கமாண்டோ பிரகாஷ் என்பவர் கமாண்டோ சுரேந்தருக்கு அந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில், தேசிய அளவில் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஏற்பாடு செய்ய முன்வருவதாக கூறி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மவோயிஸ்ட் முக்கிய தலைவர்களுடன் திக்விஜய் சிங்கிற்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கு இந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



மாவோயிஸ்டுகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு தன் மீதுள்ள பயம் காரணமாக தனது பெயரை இப்படி தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். தான் ராஜ்யசபா உறுப்பினர் என்பதால் பொதுதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு தனது தொலைப்பேசி எண் தெரியும். கடந்த 4 ஆண்டுகளாக தான் அந்த எண்ணை பயன்படுத்துவதில்லை என்றும் திக்விஜய் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போதிய ஆதாரம் இருந்தால் தன்னை மீது நடவடிக்கை எடுக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (33)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement