2000ம் ஆண்டு நடந்த சம்பவம்
இது தொடர்பாக, பஸ் எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டனர்; தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், 2016 மார்ச் மாதம், ஆயுள் தண்டனையாக குறைத்தது. மூன்று பேரும், சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
தமிழக அரசு முடிவு
நீண்ட நாட்களாக, சிறையில் உள்ள, 1,800 கைதிகளை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர், 60 வயதிற்கு மேற்பட்டோர், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் என்ற அடிப்படையில், கைதிகளை தேர்வு செய்து, அவர்களை விடுதலை செய்யும்படி, கவர்னரிடம், தமிழக அரசு பரிந்துரை செய்தது.
கவர்னர் அனுமதி அவசியம்