சபரிமலை:இருமுடி கட்டுகளுடன் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது
சபரிமலை:சபரிமலையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானம் முன் பஜனை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசினர். பின் ஊர்வலமாக சென்ற பக்தர்களை கமாண்டோபடை உட்பட போலீசார் தடுத்து நிறுத்தி, இருமுடி கட்டுகளுடன் கைது செய்தனர்.