ADVERTISEMENT
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை என ஆவசேமுற்ற மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த போராட்டம் நடந்து வருகிறது. தகவல்களை மீடியாக்களுக்கு பரவ விடாமல் இன்டர்நெட், தொலைதெடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் ஆவேசமுற்ற போராட்டக்காரர்கள், சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., திருவரங்குளம் பி.டி.ஓ., ஆலங்குடி டி.எஸ்.பி, ஆலங்குடி தாசில்தார் ஆகியோரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையை அடுத்து திருச்சி சரக டிஐஜி, புதுக்கோட்டை எஸ்பி தலைமையில், 1,000 போலீசார் கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அறந்தாங்கி அருகே மரமடக்கி என்ற கிராமத்திலும் நிவாரண பொருட்கள் வரவில்லை எனக்கூறி, மக்கள் போலீசாரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் ஒரு சில இடங்களில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி டி.எஸ்.பி., மண்டை உடைந்தது
இந்நேரத்தில் ஆவேசமுற்ற போராட்டக்காரர்கள், சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., திருவரங்குளம் பி.டி.ஓ., ஆலங்குடி டி.எஸ்.பி, ஆலங்குடி தாசில்தார் ஆகியோரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையை அடுத்து திருச்சி சரக டிஐஜி, புதுக்கோட்டை எஸ்பி தலைமையில், 1,000 போலீசார் கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அறந்தாங்கி அருகே மரமடக்கி என்ற கிராமத்திலும் நிவாரண பொருட்கள் வரவில்லை எனக்கூறி, மக்கள் போலீசாரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் ஒரு சில இடங்களில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.