ADVERTISEMENT
புதுடில்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏன்
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது: ரபேல் ஒப்பந்தத்தில், பா.ஜ.,வின் தலையீட்டை பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரான்ஸ் அதிபர், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என பிரதமர் கூறியதாக தெரிவித்தார். தற்போது உயர் அதிகாரி ஒருவரும் இதனையே கூறுகிறார். இதன் மூலம், நடந்துள்ளது ஊழல் என்பது தெளிவாகிறது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றுள்ளது ஏன்?
தீர்வு
ரபேல் விவகாரத்தில் மோடி ஏன் பதில் அளிக்காமல் அமைதியாக உள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதே தீர்வு. எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க ரெய்டு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.