தொழிலாளி படுகொலை
கோயம்பேடு: -கோயம்பேட்டில், வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு பேருந்து நிலையம், 100 அடி சாலை அருகே, ஓட்டலின் பின்புறம் உள்ள காலி இடத்தில், வாலிபர் ஒருவர், ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பதும், அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.இறந்த நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து, நடைபாதையிலேயே துாங்குவதும் தெரியவந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!