ADVERTISEMENT
மும்பை: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி வரும் 27-ல் மகாராஷ்டிரா காங்., போராட்டம் நடத்த உள்ளதாக மகா., மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசல்ட் விமான தயாரிப்பு நிறுவனம் ரபேல் போர் ரக விமானம் தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர இந்திய அரசு நிர்பந்தித்தாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயின் ஹோலண்டே கூறி இருந்தார்.
இதனையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் செய்துள்ள ஊழல் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. இருவரும் தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும்.
இதனை வலியுறுத்தும் விதமாக வரும் 27-ம் தேதி மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதற்காக பார்லி, கூட்டு குழு அமைக்கவும் வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசல்ட் விமான தயாரிப்பு நிறுவனம் ரபேல் போர் ரக விமானம் தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர இந்திய அரசு நிர்பந்தித்தாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயின் ஹோலண்டே கூறி இருந்தார்.
இதனையடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் செய்துள்ள ஊழல் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. இருவரும் தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும்.
இதனை வலியுறுத்தும் விதமாக வரும் 27-ம் தேதி மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதற்காக பார்லி, கூட்டு குழு அமைக்கவும் வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.