ADVERTISEMENT
கோட்டயம்: பாலியல் பலாத்காரம் செய்த பிஷப்பை கைது செய்யும் வரை ஓய மாட்டோம் என போராடி வந்த கேரள கன்னியாஸ்திரிகள் இன்று தங்களின் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் பிரான்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் அளித்தார். நீண்ட யோசனைக்கு பின்னர் போலீசார் பிஷப்புக்கு சம்மன் அனுப்பி 3 நாள் விசாரணை நடத்தினர். பின்னர் போதிய ஆதாரங்களின் அடிப்படையில் பிஷப்பை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
நேற்றே (21 ம் தேதி )பிஷப் கைது செய்யப்பட்டாலும், கன்னியாஸ்திரிகள் தங்களின் போராட்டத்தை கைவிடவில்லை. இன்று அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்த 14 நாட்களுக்கு பின்னர் கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களின் ஆதரவு அமைப்புகள் போராட்டத்தை திரும்ப பெற்று கொண்டனர். பிஷப் கைது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கன்னியாஸ்திரிகள் தெரிவித்தனர்.