Load Image
Advertisement

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

நடுவீரப்பட்டு: பாலுார் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கி, தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமுஞ்சனமும், வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
கடந்த 19ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து, 9:00 மணிக்கு பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
நேற்று 21ம் தேதி காலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு திருத்தேரில் சுவாமி வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement