Load Image
Advertisement

தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் துவங்கியது

சிதம்பரம்: கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம் சார்பில் சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது.
மேலவீதி ேஷாரூமில் நடந்த விழாவிற்கு கடலுார் மண்டல முதுநிலை மேலாளர் கோபால் தலைமை தாங்கினார். சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் ஆஷா கிறிஸ்டி எமரால்ட் குத்துவிளக்கு ஏற்றி, தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் தணிக்கை மேலாளர் சரவணன், சிதம்பரம் கிளை நிலைய மேலாளர் ஜம்புலிங்கம், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், கடலுார் மண்டல துணை மேலாளர் ஸ்டாலின் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த 15ம் தேதி முதல் வரும் ஜனவரி 31ம் தேதி வரை 30 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் புதிய ரகங்களாக காஞ்சிபுரம், சேலம் பட்டுச் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், சிறுமுகை, அருப்புக்கோட்டை பரமக்குடி, உறையூர், சேலம் காட்டன் சேலைகள், பல ரகங்களில் சுடிதார் மெட்டீரியல்ஸ், இயற்கை சாயமிட்ட பட்டு சேலைகள், ரெடிமேட் சட்டைகள், மாப்பிள்ளை செட் டிரஸ்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு வட்டியில்லா சுலப கடன் வசதியில் வழங்கப்படுகிறது.
கோ-ஆப்டெக்ஸ்சில் மாதாந்திர சேமிப்பு மூலம் கூடுதல் லாபத்தில் கைத்தறி துணிகள் பெறும் கனவு நனவு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை 11 மாதங்கள் செலுத்தினால், 12வது மாதத்தில் மொத்த சேமிப்புடன் கூடுதலாக கைத்தறி மற்றும் பட்டு ரகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு சிதம்பரம் விற்பனை நிலையத்திற்கு 1.14 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மண்டல மேலாளர் முதுநிலை மேலாளர் கோபால் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement