சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் பகுதியில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் சாய்ந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவே விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவரப்பூர் - வி.சாத்தப்பாடி இணைப்பு சாலையோரமுள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய போர்வெல் மோட்டார்கள் மற்றும் பள்ளி, குடியிருப்பு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வீசிய புயலின் போது 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.
பள்ளி அருகே உள்ள மின் கம்பங்கள் சாய்வாகவும், விழும் நிலையிலும் உள்ளன.
இதனால், வயலில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களை இயக்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர்.
அதுமட்டுமின்றி, குடியிருப்பு வழியாகச் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் எட்டி தொடும் துாரத்திலும் உள்ளது. இதனால், குடியிருப்பு அருகே குழந்தைகள் விளையாடுவதில் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. ஏதாகிலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுவரப்பூர் - வி.சாத்தப்பாடி இணைப்பு சாலையோரமுள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய போர்வெல் மோட்டார்கள் மற்றும் பள்ளி, குடியிருப்பு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வீசிய புயலின் போது 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.
பள்ளி அருகே உள்ள மின் கம்பங்கள் சாய்வாகவும், விழும் நிலையிலும் உள்ளன.
இதனால், வயலில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களை இயக்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர்.
அதுமட்டுமின்றி, குடியிருப்பு வழியாகச் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் எட்டி தொடும் துாரத்திலும் உள்ளது. இதனால், குடியிருப்பு அருகே குழந்தைகள் விளையாடுவதில் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. ஏதாகிலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!