உலக தமிழ் சங்கத்தை நிர்வகிக்க 50 தமிழ் சங்கங்கள்: அமைச்சர்
மதுரை:''மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தை நிர்வகிக்க 50 தமிழ்ச்சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்'' என அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.
தமிழ்நாடு பெயர் சூட்டலின் 50ம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க்கல்லுாரியில் நடந்தது. தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பசும்பொன் வரவேற்றார். கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: உலகத்தமிழ்ச்சங்கத்தை நிர்வகிக்க உலகில் உள்ள 50 தமிழ்ச்சங்கங்களில் இருந்து 50 பேரை தேர்வு செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்படி 20 உறுப்பினர்கள் வெளிநாட்டிலும், 10 பேர் வெளிமாநிலங்களிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒருமாதத்திற்குள் நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை தேடி வருகிறோம். அச்சுவடிகள் மதுரை செந்தமிழ்க்கல்லுாரியில்கூட இருக்க வாய்ப்புண்டு. இன்று ஐ.டி., துறையில் அதிக வேலைவாய்ப்பு இல்லை. ஆனால் படைப்புதிறன், கலாசார துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தமிழ் படித்தால் நிச்சயம் மாணவர்களுக்கு அது சோறு போடும் என்றார்.
நான்காம் தமிழ்ச்சங்கத்தலைவர் குமரன்சேதுபதி, மனைவி லட்சுமி, செயலாளர் மாரியப்ப முரளி, முன்னாள் துணைவேந்தர் திருமலை, முதல்வர் வேணுகா பங்கேற்றனர்.
தமிழ்நாடு பெயர் சூட்டலின் 50ம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க்கல்லுாரியில் நடந்தது. தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பசும்பொன் வரவேற்றார். கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: உலகத்தமிழ்ச்சங்கத்தை நிர்வகிக்க உலகில் உள்ள 50 தமிழ்ச்சங்கங்களில் இருந்து 50 பேரை தேர்வு செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்படி 20 உறுப்பினர்கள் வெளிநாட்டிலும், 10 பேர் வெளிமாநிலங்களிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒருமாதத்திற்குள் நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும்.
திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை தேடி வருகிறோம். அச்சுவடிகள் மதுரை செந்தமிழ்க்கல்லுாரியில்கூட இருக்க வாய்ப்புண்டு. இன்று ஐ.டி., துறையில் அதிக வேலைவாய்ப்பு இல்லை. ஆனால் படைப்புதிறன், கலாசார துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தமிழ் படித்தால் நிச்சயம் மாணவர்களுக்கு அது சோறு போடும் என்றார்.
நான்காம் தமிழ்ச்சங்கத்தலைவர் குமரன்சேதுபதி, மனைவி லட்சுமி, செயலாளர் மாரியப்ப முரளி, முன்னாள் துணைவேந்தர் திருமலை, முதல்வர் வேணுகா பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!