Load Image
Advertisement

ஆதிதிராவிடர் விடுதிகளில் பயோ-மெட்ரிக் கருவி

தேனி: ''ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள், பணியாளர்கள் வருகை, பதிவுக்காக 'பயோ-மெட்ரிக்' கருவிகள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது,''என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்தார்
தேனியில் அவர் கூறியதாவது:
பட்டியல் இனத்தவர் நல ஆணையத்தின் சார்பில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த ஓராண்டில் 174 மாவட்டங்களில் ஆய்வு செய்து முடித்துள்ளோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளின் செயல்பாடுகள், வன்கொடுமை தடுப்புச்சட்டம், இடஒதுக்கீடு, தனிநபர் கழிப்பறை பயன்பாடு குறித்து ஆய்வு செய்கிறோம்.
ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள், பணியாளர்களுக்காக 'பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டுக்கான
கருவிகள் பொருத்தப்படும். மாநிலத்தில் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதனை மீட்டு, மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். தேனி மாவட்டத்தில் 3,515 ஏக்கரில் பஞ்சமி நிலங்கள் உள்ளன. அதில் மீட்கப்பட வேண்டிய நிலங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 2,210 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்து மீட்க டி.ஆர்.ஓ.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,,என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement