ADVERTISEMENT
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சுரங்க நடைபாததையில் தகராறில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டர் செல்லத்துரை எஸ்.ஐ., மோகனசுந்தரம் ஆகியோரை மர்மநபர்கள் கத்தியால் தாக்கினர். போலீசாரை தாக்கிய மர்மநபர்கள் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.