ADVERTISEMENT
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் அறிக்கை: அ.தி.மு.க., வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தொகுதி ஆண்டிப்பட்டி. இத்தொகுதியில் இருந்து தான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதல்வராகினர். ஆனால் இன்றோ, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனால், இத்தொகுதி தனித்து விடப்பட்டுள்ளது. தான் ஆண்டியானதோடு, ஆண்டிப்பட்டி தொகுதியையும், தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டியாக்கி விட்டார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேச்சு: பசுமை வழிச் சாலை திட்டம், மிகச் சிறப்பானது. பயண துாரம் குறைந்து, போக்குவரத்து எளிதாக அமையும். இதுபோன்ற திட்டத்திற்கு, எதிர்க்கட்சியினர், வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தில், நிலம், வீடு போன்றவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் அறிக்கை: 'ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க., அரசை அசைக்க முடியாது' என, முதல்வர் கூறியிருக்கிறார். ஒரு ஸ்டாலினை சட்டசபையில் பேச விடுவதற்கே, அஞ்சி நடுங்கும் நீங்கள், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் என்ன நடக்கும் என்பதை, புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ, விபத்தில் முதல்வராகிவிட்ட பழனி சாமி, இதுபோல் வீராப்பு பேசுவதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: பசுமை வழி சாலை திட்டத்தை, மக்களின் ஒப்புதலின்றி, அவர்கள் மீது திணிக்கக்கூடாது. மக்களின் அச்சத்தைப் போக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும். அதுவரை, பசுமை வழி சாலை திட்டத்திற்கான நடைமுறைகள் அனைத்தையும், நிறுத்தி வைக்க வேண்டும்.
அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: ஆட்சியால் வரும் ஆதாயத்திற்காக, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைப்பதே சிந்தனையாக கொண்ட இந்த கொடிய அரசு, ஜெயலலிதாவின் புகழை யார் களங்கப்படுத்தினாலும், அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல், பதவியில் இருப்பதை மட்டுமே முக்கியம் என, கருதுகிறது. ஜெயலலிதாவின் புகழுக்கும், எண்ணங்களுக்கும் விரோதமான இந்த கொடியவர்களின் கொட்டம், விரைவில் முடிவுக்கு வரும். அதை, அ.ம.மு.க., தன் கடமையாக கொண்டு செய்து காட்டும்.
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, எம்.பி., பேட்டி: 'இனி வரும் தேர்தல்களில், பணம் கொடுத்தால் தான், மக்கள் ஓட்டு போடுவர்' என, தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறுகின்றனர். அந்த மனநிலையை, அவர்கள் மாற்றிக் கொள்வதோடு, மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேச்சு: பசுமை வழிச் சாலை திட்டம், மிகச் சிறப்பானது. பயண துாரம் குறைந்து, போக்குவரத்து எளிதாக அமையும். இதுபோன்ற திட்டத்திற்கு, எதிர்க்கட்சியினர், வேண்டுமென்றே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தில், நிலம், வீடு போன்றவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் அறிக்கை: 'ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க., அரசை அசைக்க முடியாது' என, முதல்வர் கூறியிருக்கிறார். ஒரு ஸ்டாலினை சட்டசபையில் பேச விடுவதற்கே, அஞ்சி நடுங்கும் நீங்கள், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் என்ன நடக்கும் என்பதை, புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ, விபத்தில் முதல்வராகிவிட்ட பழனி சாமி, இதுபோல் வீராப்பு பேசுவதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: பசுமை வழி சாலை திட்டத்தை, மக்களின் ஒப்புதலின்றி, அவர்கள் மீது திணிக்கக்கூடாது. மக்களின் அச்சத்தைப் போக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும். அதுவரை, பசுமை வழி சாலை திட்டத்திற்கான நடைமுறைகள் அனைத்தையும், நிறுத்தி வைக்க வேண்டும்.
அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: ஆட்சியால் வரும் ஆதாயத்திற்காக, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைப்பதே சிந்தனையாக கொண்ட இந்த கொடிய அரசு, ஜெயலலிதாவின் புகழை யார் களங்கப்படுத்தினாலும், அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல், பதவியில் இருப்பதை மட்டுமே முக்கியம் என, கருதுகிறது. ஜெயலலிதாவின் புகழுக்கும், எண்ணங்களுக்கும் விரோதமான இந்த கொடியவர்களின் கொட்டம், விரைவில் முடிவுக்கு வரும். அதை, அ.ம.மு.க., தன் கடமையாக கொண்டு செய்து காட்டும்.
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, எம்.பி., பேட்டி: 'இனி வரும் தேர்தல்களில், பணம் கொடுத்தால் தான், மக்கள் ஓட்டு போடுவர்' என, தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூறுகின்றனர். அந்த மனநிலையை, அவர்கள் மாற்றிக் கொள்வதோடு, மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!