ஷாஜாபூர்: 'நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின; ஏதோ சதி நடப்பதாக தோன்றுகிறது' என ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
ம.பி., மாநிலம் ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன் நாட்டில் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடிந்தபின் புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது எங்கும் பார்க்க முடிவதில்லை. பல ஏடிஎம்.,கள் பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன.
பதுக்கியவர்கள் யார்?
புழக்கத்தில் பணம் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே சென்றன. பணத்தை பதுக்கியவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத்தட்டுப்பாட்டை போக்க முயற்சிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ 2000 நோட்டுகள் எங்கே மறைந்தது. நம் நாட்டில் ஒரு வித செக்கூரிட்டியும் இல்லாமல் கோடி கணக்கில் கடன் கொடுக்க பாங்குகள் இருக்கும்போது, அதை புழக்கத்தில் விடும் பாங்குகளுக்கு பதுக்க சொல்லியா தரவேண்டும். ஒரு ஆட்சி செய்யும் சில நல்லவைகளை முறியடிப்பதையே லட்சியமாக கொண்ட எதிர் கட்சிகள் இருக்கும்போது எதுவும் சாத்தியமல்ல. எல்லா கொசுறு கட்சிகளையும் ஒழித்துவிட்டு இரண்டே இரண்டு பெரும் கட்சிகள் இருந்தால் போதும். டெமோகிராடிக் - ரிபப்லிக்கன் போல.