வட மாநில கொள்ளையன் கைது
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, தம்பதியிடம் கொள்ளையடிக்க முயன்றவனை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், வெங்கடாபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 68; இவரது மனைவி சிவகாமி, 55. தங்கள் விவசாயநிலத்தில், வீடு கட்டி வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 2:00 மணிக்கு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, கொள்ளையடிக்க முயன்றனர்.
தம்பதியினர் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, கொள்ளையரில் ஒருவனை மட்டும் பிடித்து, உம்மராபாத் போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவன், ம.பி., மாநிலம், கைலாஷ் கங்கா என்ற இடத்தை சேர்ந்த கமலேஷ், 21, என்பதும், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
இவனுடன், 25 பேர், ஆம்பூர் மற்றும் சுற்று பகுதிகளுக்கு வந்து, தனியாக வசித்து வருவோரை கண்டறிந்து, கொள்ளையடிக்க வந்துள்ளது தெரியவந்தது. கமலேஷை கைது செய்த போலீசார், மற்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், வெங்கடாபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 68; இவரது மனைவி சிவகாமி, 55. தங்கள் விவசாயநிலத்தில், வீடு கட்டி வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 2:00 மணிக்கு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, கொள்ளையடிக்க முயன்றனர்.
தம்பதியினர் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, கொள்ளையரில் ஒருவனை மட்டும் பிடித்து, உம்மராபாத் போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவன், ம.பி., மாநிலம், கைலாஷ் கங்கா என்ற இடத்தை சேர்ந்த கமலேஷ், 21, என்பதும், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
இவனுடன், 25 பேர், ஆம்பூர் மற்றும் சுற்று பகுதிகளுக்கு வந்து, தனியாக வசித்து வருவோரை கண்டறிந்து, கொள்ளையடிக்க வந்துள்ளது தெரியவந்தது. கமலேஷை கைது செய்த போலீசார், மற்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!