ADVERTISEMENT
புதுடில்லி: பார்லி. ராஜ்யசபாவில் 58 இடங்களுக்கு மார்ச் 23-ம தேதி தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா இடங்கள் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் காலியாகின்றன. காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 12-ம் தேதி ஆகும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா இடங்கள் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் காலியாகின்றன. காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 12-ம் தேதி ஆகும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உ.பி.,யில் அதிகபட்சம்
உத்தரபிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 10 இடங்கள் காலியாகிறது. உத்திரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகார், மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தலா 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்குவங்கம், மத்தியபிரதேசத்தில் தலா 5 பேரும், கர்நாடகா, குஜராத்தில் இருந்து தலா 4 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.