அவிநாசி தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்; கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவேசம்
திருப்பூர் : அவிநாசி தாசில்தார் ஊழியர் விரோத போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டி, மாவட்டம் முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று, அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி தாலுகா தாசில்தாராக, விவேகானந்தன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பணியாற்றி வருகிறார். பட்டா, வாரிசு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, பொதுமக்கள் தாலுகா அலு வலகத்துக்கு சென்று தாசில்தாரை சந்திப்பது என்றால் பெரிய விஷயமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.சான்றிதழ்கள் பெற தாலுகா அலுவலகத்தில் பணம் கேட்கப்படுவதாகவும், வேலை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, விசாரிக்காமலேயே "மெமோ' கொடுக் கப்படுவதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், அவிநாசி தாசில்தார் விவேகானந்தனை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்; அவிநாசி வட்ட செயலாளர் குமார், வட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தனர்.இதில், திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து, 165 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். தாசில் தாருக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பப்பட்டன.கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், "மக்கள் பணியை ஒழுங்காக செய்து வரும் அலுவலர்கள் மீது, தேவை யில்லாமல் நடவடிக்கை எடுப்பது; விசாரிக்காமல், மெமோ கொடுப்பது போன்ற செயல்களில், தாசில்தார் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது, மக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்,' என்றனர்.
அவிநாசி தாலுகா தாசில்தாராக, விவேகானந்தன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பணியாற்றி வருகிறார். பட்டா, வாரிசு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, பொதுமக்கள் தாலுகா அலு வலகத்துக்கு சென்று தாசில்தாரை சந்திப்பது என்றால் பெரிய விஷயமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.சான்றிதழ்கள் பெற தாலுகா அலுவலகத்தில் பணம் கேட்கப்படுவதாகவும், வேலை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, விசாரிக்காமலேயே "மெமோ' கொடுக் கப்படுவதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், அவிநாசி தாசில்தார் விவேகானந்தனை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்; அவிநாசி வட்ட செயலாளர் குமார், வட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தனர்.இதில், திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து, 165 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். தாசில் தாருக்கு எதிராக, கோஷங்கள் எழுப்பப்பட்டன.கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், "மக்கள் பணியை ஒழுங்காக செய்து வரும் அலுவலர்கள் மீது, தேவை யில்லாமல் நடவடிக்கை எடுப்பது; விசாரிக்காமல், மெமோ கொடுப்பது போன்ற செயல்களில், தாசில்தார் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது, மக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்,' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!