Load Image
Advertisement

மொபைல் நெட்வொர்க் முடங்கியதால் அவதி

திருப்பூர் : திருப்பூரில், தனியார் மொபைல்போன் சேவை நேற்று முடங்கியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ஏர்செல் மொபைல்போன் சேவை நேற்று செயலிழந்தது. திடீரென மொபைல் போன் சேவை முடங்கியதால், திருப்பூர் தொழில்துறையினர், தொழிலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் என, பலதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆவேசமடைந்த வாடிக்கையாளர்கள், நகரில் உள்ள அதன் பிரதான ஷோரூம்களுக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், வேறு நிறுவன "சிம்' கார்டுகளை வாங்கி, தங்களின் தொடர்பை புதுப்பித்துக் கொண்டனர். முக்கிய ரோடுகளில், தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களின் விற்பனை பிரதிநிதிகள், தற்காலிக மையங்களை திறந்து, "பழைய எண்ணுக்கே, புதிய பிராண்ட் சேவை' தருவதாக கூறி, விளம்பரம் செய்தனர். நிறுவன ஷோரூம்களில், திருப்பூர் முழுவதும் உள்ள ஏர்செல் ஷோரூம்களில், வாடிக்கையாளர்களின் முற்றுகையால் பதற்றம் நிலவியது. போலீசார் சென்று வாடிக்கையாளரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement