பள்ளியில் பாழடைந்த கட்டடம் இடிக்க பெற்றோர் கோரிக்கை
உடுமலை : சிக்கனுாத்து அரசுப்பள்ளி வளாகத்திலுள்ள, பாழடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் சிக்கனுாத்து கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில், பயன்பாடு இல்லாத ஊராட்சி மன்ற கட்டடம் பாழடைந்து, எந்நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தை கடந்தே மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.
மேலும், மைதான வசதி இல்லாததால், வளாகத்தில், அச்சுறுத்தும் கட்டடத்தின் அருகிலேயே விளையாடும் நிலைக்கு அப்பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பயன்பாடில்லாத கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றிய நிர்வாகம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து அரசுத்துறைகளுக்கும் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பாதுகாப்பில்லாத அரசு கட்டடங்களை கணக்கெடுத்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு வெளியிட்ட உத்தரவு, சிக்கனுாத்தில் மட்டும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியம் சிக்கனுாத்து கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில், பயன்பாடு இல்லாத ஊராட்சி மன்ற கட்டடம் பாழடைந்து, எந்நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தை கடந்தே மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.
மேலும், மைதான வசதி இல்லாததால், வளாகத்தில், அச்சுறுத்தும் கட்டடத்தின் அருகிலேயே விளையாடும் நிலைக்கு அப்பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பயன்பாடில்லாத கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றிய நிர்வாகம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து அரசுத்துறைகளுக்கும் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பாதுகாப்பில்லாத அரசு கட்டடங்களை கணக்கெடுத்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு வெளியிட்ட உத்தரவு, சிக்கனுாத்தில் மட்டும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!