Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

வெயிலுக்கு ஏற்ற குறுந்தானியம்


இந்தியாவில் அதிகளவில் விளைவித்து, உணவில் சேர்க்கப்படும் தானியங்களில் நான்காவது இடத்தில் கம்பு உள்ளது. இது வெயில் காலத்தில் அதிகளவில் விற்பனை ஆகிறது. கம்பில் நாட்டுக்கம்பு, கலப்பின கம்பு என இரு வகைகள் உள்ளன. மற்ற குறுந்தானியங்களை விட, கம்பில் அதிக புரதச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. கம்பில், ரத்த உற்பத்திக்கு தேவையான இரும்பு சத்து உள்ளது. இன்று வர்த்தக ரீதியாக விற்பனை ஆகின்ற சில வகை ஊட்டச்சத்து பானங்களில், கம்பு தான் முக்கிய மூலப்பொருள். சர்க்கரை, தைராய்டு போன்ற நோய்களை குணப்படுத்தும் இயல்பு, கம்புக்கு உள்ளது.

தகவல் சுரங்கம்

கஸ்துாரிபா சமாதி


மகாத்மா காந்தியின் மனைவி கஸ்துாரிபா காந்தியின் சமாதி, புனே ஆகாகான் அரண்மனை வளாகத்தில் உள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைதான கஸ்துாரிபா, காந்தியடிகளுடன் ஆகாகான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டார். சிறையிலேயே நிமோனியாவால் பாதிக்கப்பட்டு 1942 பிப்., 22ல் இறந்தார். சிறையிலேயே எரியூட்டப்பட்ட கஸ்துாரிபாவுக்கு சிறை வளாகத்திலேயே சமாதி கட்டப்பட்டது. இன்று ஆகாகான் அரண்மனை அருங்காட்சியகமாக உள்ளது. அவரது மறைவிற்கு பின்பு, தொடங்கப்பட்ட கஸ்துாரிபா நினைவு நிதி இன்றும் இந்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement