பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம்
புதுடில்லி:இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹுவின் இந்திய வருகையின் போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கடந்த மாதம், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் தலைநகரான, டெல் அவிவ் நகருக்கு பதில், ஜெருசலேமை தலைநகராக அறிவித்தார். இதற்கு எதிராக, ஐ.நா., பொது சபையில் நடந்த ஓட்டெடுப்பில், 127 நாடுகளுடன், நம் நாடும் இணைந்து ஓட்டளித்தது.நாளை, ஆறு நாள் பயணமாக, இஸ்ரேல் பிரதமர், நேதன்யாஹு, இந்தியா வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. அந்நாட்டு அரசு மூலம், இந்த பீரங்கிகளை வாங்க, இந்திய அரசு முடிவு செய்தது. இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகையின் போது, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இது குறித்து, நம் நாட்டுக்கான இஸ்ரேல் துாதர், டேனியல் கர்மான் கூறியதாவது:
பிரதமர், நேதன்யாஹுவுடன், அதிகாரிகள் மட்டு மல்லாமல், 130 தொழிலதிபர்கள் வருகின்றனர். பிரதமர் மோடியுடன், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் முதலீடு செய்வது குறித்து, பிரதமர் நேதன்யாஹு, விரிவான பேச்சு நடத்த உள்ளார்.இந்திய பயணத்தின் போது, குஜராத் மற்றும் மும்பைக்கும், நேதன்யாஹு செல்கிறார். 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் தலைநகரான, டெல் அவிவ் நகருக்கு பதில், ஜெருசலேமை தலைநகராக அறிவித்தார். இதற்கு எதிராக, ஐ.நா., பொது சபையில் நடந்த ஓட்டெடுப்பில், 127 நாடுகளுடன், நம் நாடும் இணைந்து ஓட்டளித்தது.நாளை, ஆறு நாள் பயணமாக, இஸ்ரேல் பிரதமர், நேதன்யாஹு, இந்தியா வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பரில், இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. அந்நாட்டு அரசு மூலம், இந்த பீரங்கிகளை வாங்க, இந்திய அரசு முடிவு செய்தது. இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகையின் போது, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இது குறித்து, நம் நாட்டுக்கான இஸ்ரேல் துாதர், டேனியல் கர்மான் கூறியதாவது:
பிரதமர், நேதன்யாஹுவுடன், அதிகாரிகள் மட்டு மல்லாமல், 130 தொழிலதிபர்கள் வருகின்றனர். பிரதமர் மோடியுடன், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் முதலீடு செய்வது குறித்து, பிரதமர் நேதன்யாஹு, விரிவான பேச்சு நடத்த உள்ளார்.இந்திய பயணத்தின் போது, குஜராத் மற்றும் மும்பைக்கும், நேதன்யாஹு செல்கிறார். 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!