ADVERTISEMENT
துள்ளிக்குதித்த ஜெர்மன் நாட்டவர்!
கோவை, ஜி.டி., தொழிற்பயிற்சி நிறுவனத்தில், 11வது பட்டமளிப்பு விழா நடந்தது.
இந்தியாவுக்கான, ஜெர்மன் நாட்டு துாதர்
மார்ட்டின் நே, ஜெர்மன் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு தொழிற்பயிற்சி பிரிவு தலைவர் ஸ்டெபின் பயர் உட்பட பலர், மாணவர்களுக்கு பட்டம், சான்றிதழ்கள் வழங்கினர்.
சக மாணவர்கள், கை தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். மாணவர்களின் உற்சாகத்தை பார்த்த, ஸ்டெபின் பயர், மேடையிலேயே துள்ளிக் குதிக்க, கரகோஷம் காதை பிளந்தது.
பத்திரிகையாளர்களில் ஒருவர், 'ஜெர்மனில், இவர்களை போன்றவர்கள், மாணவர்களை உற்சாகப்படுத்துவதால் தான், அந்த நாடு, தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறியுள்ளது. நம் நாட்டிலும் இதேபோல் உற்சாகங்களும், ஊக்குவிப்பும் இருந்தால், அனைத்து துறைகளும் இளைஞர்களால் வளர்ச்சி பெறும்' என ஆதங்கப்பட, சக பத்திரிகையாளர்கள் ஆமோதித்தனர்.
கோவை, ஜி.டி., தொழிற்பயிற்சி நிறுவனத்தில், 11வது பட்டமளிப்பு விழா நடந்தது.
இந்தியாவுக்கான, ஜெர்மன் நாட்டு துாதர்
மார்ட்டின் நே, ஜெர்மன் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு தொழிற்பயிற்சி பிரிவு தலைவர் ஸ்டெபின் பயர் உட்பட பலர், மாணவர்களுக்கு பட்டம், சான்றிதழ்கள் வழங்கினர்.
சக மாணவர்கள், கை தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். மாணவர்களின் உற்சாகத்தை பார்த்த, ஸ்டெபின் பயர், மேடையிலேயே துள்ளிக் குதிக்க, கரகோஷம் காதை பிளந்தது.
பத்திரிகையாளர்களில் ஒருவர், 'ஜெர்மனில், இவர்களை போன்றவர்கள், மாணவர்களை உற்சாகப்படுத்துவதால் தான், அந்த நாடு, தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறியுள்ளது. நம் நாட்டிலும் இதேபோல் உற்சாகங்களும், ஊக்குவிப்பும் இருந்தால், அனைத்து துறைகளும் இளைஞர்களால் வளர்ச்சி பெறும்' என ஆதங்கப்பட, சக பத்திரிகையாளர்கள் ஆமோதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!