கொசு ஒழிப்பு பணி துரிதம்
கிருஷ்ணராயபுரம்:
புணவாசிப்பட்டி கிராமத்தில், மருத்துவ சுகாதாரத்துறை சார்பில், தீவிர
டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தல வாடி
பஞ்சாயத்து புணவாசிப்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து
வருகின்றனர். இந்த கிராமத்தில், கிருஷ்ணராயபுரம் மருத்துவ சுகாதார துறை
சார்பில், வீடு வீடாக டெங்கு கொசு தடுப்பு பணிகள் நடந்தன. இதில், வீடுகளில்
மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள், குப்பை தொட்டி, கடை வீதியில்
உள்ள கடைகள் ஆகிய பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிருஷ்ணராயபுரம்
பகுதி சுகாதார ஆய்வளார் தினேஷ் பஞ்சாயத்து மற்றும் மஸ்தூர் பணியாளர்கள்
பணிகளில் ஈடுபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!