Load Image
Advertisement

குவாரி விபத்தில் 2 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில், கிரானைட் குவாரியில் ஏற்பட்ட விபத்தில், இரண்டு பேர் இறந்தனர்; ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். திருவனந்தபுரம் அருகே, தனியார் கிரானைட் குவாரி ஒன்று உள்ளது. இங்கு, நேற்று மதியம், தொழிலாளர்கள், கற்களை வெட்டி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது, குவாரியின் ஒரு பகுதி, திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கினர். தகவல் அறிந்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்திருந்த ஏழு பேர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement