கார்கள் மோதல்: இருவர் பலி
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் பலியாகினர். ஏழு பேர் காயமுற்றனர்.
விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி கிறிஸ்டோபர், 70. இவரது மனைவி பாக்கியராணி, 65. இவர்கள் மதுரை விமான நிலையம் செல்ல திருமங்கலம் வழியாக விடத்தகுளம் ரோட்டில் காரில் சென்றனர். டிரைவர் ரஞ்சித் காரை ஓட்டினார். ராயபாளையம் அருகே காமாட்சிபுரம் பாண்டியன், 60, திருவேடகம், 38, ராமலட்சுமி, 24, காளியப்பன், 16, ராஜாத்தி, 62, வெங்கடேஷ், 24. இவர்கள் விடத்தகுளம் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். விடத்தகுளம் அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதின.
இதில் கிறிஸ்டோபர், பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். மற்ற ஏழு பேரும் காயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி கிறிஸ்டோபர், 70. இவரது மனைவி பாக்கியராணி, 65. இவர்கள் மதுரை விமான நிலையம் செல்ல திருமங்கலம் வழியாக விடத்தகுளம் ரோட்டில் காரில் சென்றனர். டிரைவர் ரஞ்சித் காரை ஓட்டினார். ராயபாளையம் அருகே காமாட்சிபுரம் பாண்டியன், 60, திருவேடகம், 38, ராமலட்சுமி, 24, காளியப்பன், 16, ராஜாத்தி, 62, வெங்கடேஷ், 24. இவர்கள் விடத்தகுளம் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். விடத்தகுளம் அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதின.
இதில் கிறிஸ்டோபர், பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். மற்ற ஏழு பேரும் காயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!