மாணவி தற்கொலைக்கு யார் காரணம்?
சென்னை : மாணவி தற்கொலைக்கு, கல்லுாரி நிர்வாகம் காரணமா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லுாரி விடுதிக்கு தீ வைத்த, மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர், ராக மவுனிகா, 19. சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள, சத்யபாமா பொறியியல் கல்லுாரியில், பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர், நவ., 22ல், மாதாந்திர தேர்வு எழுதிய போது, 'பிட்' அடித்ததாக, பேராசிரியரால் அவமானப்படுத்தப்பட்டார்.இதனால், தேர்வு மையத்தை விட்டு வெளியேறிய ராக மவுனிகா, கல்லுாரி வளாகத்தில், தான் தங்கி இருந்த விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் சாவுக்கு காரணமாக இருந்த, பேராசியர் மீது நடவடிக்கை கோரி, அக்கல்லுாரி மாணவர்கள் விடுதிக்கு தீ வைத்து, பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், கல்லுாரி வளாகம், போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் தற்கொலைக்கு, கல்லுாரி நிர்வாகமே காரணம் என, விசாரணை நடந்து வருகிறது' என்றார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர், ராக மவுனிகா, 19. சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள, சத்யபாமா பொறியியல் கல்லுாரியில், பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர், நவ., 22ல், மாதாந்திர தேர்வு எழுதிய போது, 'பிட்' அடித்ததாக, பேராசிரியரால் அவமானப்படுத்தப்பட்டார்.இதனால், தேர்வு மையத்தை விட்டு வெளியேறிய ராக மவுனிகா, கல்லுாரி வளாகத்தில், தான் தங்கி இருந்த விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் சாவுக்கு காரணமாக இருந்த, பேராசியர் மீது நடவடிக்கை கோரி, அக்கல்லுாரி மாணவர்கள் விடுதிக்கு தீ வைத்து, பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், கல்லுாரி வளாகம், போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் தற்கொலைக்கு, கல்லுாரி நிர்வாகமே காரணம் என, விசாரணை நடந்து வருகிறது' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!