துபாயில் இருட்டறையில் மகன் மதுரையில் தாய் கண்ணீர்
மதுரை, துபாயில் கொத்தடிமையாக சிக்கியுள்ள மகனை மீட்கக் கோரி மதுரையில் கலெக்டர் வீரராகவ ராவ்விடம் கண்ணீருடன் தாய் முறையிட்டார்.
சிலைமான் அருகே கோழிமேட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சக்தீஸ்வரன் எஸ்.ஆர்.என்., ஏஜன்சி மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி துபாய்க்கு வேலைக்கு சென்றார்.
ஆனால் அங்கு அவர் கொத்தடிமையாக சிக்கியுள்ளார்.
அவரை மீட்டு வரக்கோரி தாயார் சொக்கு நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார்.
சொக்கு கூறியதாவது: மகனுக்கு தனியார் கம்பெனியில் 24 மணி நேரம் வேலை வழங்கப்படுகிறது. இதை தட்டி கேட்டதால் இருட்டறையில் அடைத்து வைத்திருப்பதாக போனில்
தெரிவித்தான். மேலும்
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் மகனை அனுப்பி வைத்ததாக துபாய் நிறுவனம் போனில் தெரிவித்தது.
அவரை மீட்டு கொண்டு வர மனு கொடுத்தேன், என்றார். துபாயிலுள்ள இந்திய துாதரகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
சிலைமான் அருகே கோழிமேட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சக்தீஸ்வரன் எஸ்.ஆர்.என்., ஏஜன்சி மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி துபாய்க்கு வேலைக்கு சென்றார்.
ஆனால் அங்கு அவர் கொத்தடிமையாக சிக்கியுள்ளார்.
அவரை மீட்டு வரக்கோரி தாயார் சொக்கு நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார்.
சொக்கு கூறியதாவது: மகனுக்கு தனியார் கம்பெனியில் 24 மணி நேரம் வேலை வழங்கப்படுகிறது. இதை தட்டி கேட்டதால் இருட்டறையில் அடைத்து வைத்திருப்பதாக போனில்
தெரிவித்தான். மேலும்
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் மகனை அனுப்பி வைத்ததாக துபாய் நிறுவனம் போனில் தெரிவித்தது.
அவரை மீட்டு கொண்டு வர மனு கொடுத்தேன், என்றார். துபாயிலுள்ள இந்திய துாதரகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!